Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்வக்கோளாறுக்கு அளவு வேணும் காம்ரேட்! சு.வெங்கடேசுக்கு பதிலடி கொடுத்த பாஜக பிரமுகர்

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2022 (14:36 IST)
மிஸ்டர் நட்டா 95% பணிகள் முடிந்த எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே எனக் கேட்டு, காங்கிரஸ் எம்.பி,தாகூர்   மற்றும் எம்.பி., சு வெங்கடேஷ் ஒரு வீடியோ வெளியிட்டதற்கு பாஜக பிரமுகர் இன்று  ஒரு பதிவிட்டுள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதாக மத்திய பாஜக அரசு தெரிவித்திருந்தது. இதுகுறித்து,  எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன.

இந்த நிலையில், நேற்று, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு  ரூ.1,264 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கான கட்டுமானப் பணிகள் 95% நிறைவடைந்துள்ளதாகவும், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமான மாற்ற ரூ.550 கோடி  மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாகவும் கூறியிருந்தார்.
பாஜக தலைவர் ஜேபி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 95% முடிந்துவிட்டதாக கூறிய நிலையில், எய்ம்ஸ் கட்டுமான இடத்தைப் பார்வையிட்ட  மதுரை எம்பி சு.வெங்கடேஷ் மற்றும் விருது நகர் எம்பி தாகூர் 95% பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே ?    நீங்க சொன்ன இடத்தை ஒரு மணி நேரம் தேடினோம் என்று பேசி ஒரு  வீடியோ வெளியிட்டிருந்தனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தி விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், பாஜக பிரமுகர், எஸ்.ஜி சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில், மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்காக பூர்வாங்கப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பாஜக தலைவர் கூறியதைப் புரிந்துகொள்ளும் அறிவிற்குத் திறன் இல்லாத  விளம்பர பிரியர் கம்யூனிஸ எம்.பி. அதற்குள் அவசரக் குடுக்கையாக இடத்தைப் பார்க்கக் கிளம்பிவிட்டார். ஐயா எழுத்தாளரே ஆர்வக்கோளாறுக்கு அளவு வேணும் காம்ரேட்!

பூர்வாங்க பணிகள் என்றால் அர்த்தம் தெரியுமா? தெரியவில்லை எனில் கேட்டு தெளிவு பெருக! என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments