Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து வயல்களில் கச்சா எண்ணெய் - பரிதவிக்கும் விவசாயிகள்

Webdunia
வெள்ளி, 22 ஜூன் 2018 (11:38 IST)
நாகையில் ஓ.என்.ஜி.சி. குழாய் வெடித்து வயல்களில் கச்சா எண்ணெய் வெளியேறிய சம்பவம் விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் கடும் எதிர்ப்புகளையும் மீறி நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பாண்டூர் கிராமத்தில் ஓஎன்ஜிசி விவசாயிகளின் விளைநிலங்களில் கச்சா எண்ணெய் குழாய்கள் சுமார் 3 அடி ஆழத்தில் பதிக்கப்பட்டுள்ளன. பாண்டூர் மற்றும் பொன்னூர் கிராமங்களில் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் குழாய்கள் மூலம் குத்தாலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  
 
இந்நிலையில்  நேற்று பாண்டூர் கிராமத்தில் புதைக்கப்பட்ட எண்ணெய் குழாய் திடீரென வெடித்து, அதிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறியது. இதைக்கண்ட அந்த நிலத்தின் உரிமையாளர் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார்.
 
சம்பவ இடத்திற்கு வந்த ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்ட குழாயின் வால்வை அடைத்தனர். கச்சா எண்ணெய் விளைநிலத்தில் புகுந்ததால் அப்பகுதி விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments