Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்பு சென்னைவாசிகளே!! மாநகராட்சி சொல்வத கொஞ்சம் கேளுங்க பா...

Webdunia
சனி, 13 ஜூன் 2020 (09:17 IST)
கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்கள் வீட்டில் இருந்தால், என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி பட்டியலிட்டுள்ளது. 
 
கொரோனா நுண்கிருமி தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அல்லது அறிகுறி இருப்பவர்களுக்கான வீட்டில், அவர்களை பராமரிப்பவர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறைகள் பின்வருமாறு... 
 
1. கொரோனா தொற்று உள்ளவர் அல்லது அறிகுறி உள்ளவர் நீர் ஆகாரம் மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். 
2. கொரோனா தொற்று உள்ளவர் அல்லது அறிகுறி உள்ளவரோடு இருக்கும் போது முகக்கவசம் அணிவது கட்டாயம். 
3. அடிக்கடி சானிடைசர் அல்லது சோப்பு போட்டு கைகழுவ வேண்டும். முக்கியமாக கழிப்பறைகளை பயன்படுத்தும் போது. 
4. கொரோனா தொற்று உள்ளவர் அல்லது அறிகுறி உள்ளவருக்கென தனி பாத்திரம், துணி, படுக்கை ஆகியவற்றை வழங்க வேண்டும். 
5. வீட்டை நன்கு துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முக்கியமாக கொரோனா தொற்று உள்ளவர் அல்லது அறிகுறி உள்ளவர் அதிகம் புழங்கும் இடத்தில்.
6. கொரோனா தொற்று உள்ளவர் அல்லது அறிகுறி உள்ளவருக்கு முச்சு திணறல் ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவ உதவியை நாட வேண்டும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments