Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேனி தொகுதி வெற்றி – ரவிந்தரநாத் மனுத்தாக்கல் மீதான தீர்ப்பு இன்று!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (10:45 IST)
தேனி தொகுதியின் மக்களவைத் தொகுதி வேட்பாளராக வெற்றி பெற்ற ஓ பி ரவீந்தரநாத்தின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது.

தேனி தொகுதியில் அதிமுக சார்பாக வெற்றி பெற்ற ஓ பி ரவீந்தரநாத் 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றார். இப்போது அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் வாக்குக்காக பணம் கொடுத்ததாகவும் அதனால் அவரின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கூறி தேனி மக்களவை தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் தனக்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓ பி ரவீந்தரநாத் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அந்த மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments