Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிணற்றில் விழுந்த மனைவி.. காப்பாற்ற முயன்ற கணவன்.. புதுமண தம்பதிகள் பரிதாப பலி..!

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (08:29 IST)
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மனைவி கோபித்துக் கொண்டு தற்கொலை செய்ய கிணற்றில் குதித்த நிலையில் அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் கிணற்றில் குதித்த நிலையில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் அபிராமி மற்றும் சந்தோஷ் ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமணம் ஆனது. இந்த தம்பதிகள் புத்தாண்டு கொண்டாடிய நிலையில் திடீரென இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது 
 
இதனால் மணமடைந்த அபிராமி அருகில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். இது கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர், மனைவியை காப்பாற்றுவதற்காக அதே கிணற்றில் குதித்தார். இருவரும் கிணற்றில் பரிதாபமாக பலியாகி மிதந்தனர் 
 
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்  புத்தாண்டு தினத்தில் சாதாரண வாய்த்தகராறு காரணமாக சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு.. ஆனால் விலையில் மாற்றமில்லை..!

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான் - அண்ணாமலை.. ஒருவரை ஒருவர் புகழ்ந்ததால் பரபரப்பு..!

ஒவைசியிடம் ரூ.3000 கோடி வக்பு சொத்து உள்ளது: தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் தகவல்..!

வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments