Webdunia - Bharat's app for daily news and videos

Install App

28 யானைகளுக்கு கொரோனா டெஸ்ட் எடுத்தாச்சு...

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (10:28 IST)
முதுமலை டாப்சிலிப் முகாமில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

 
சமீபத்தில் வண்டலூர் பூங்காவில் இருக்கும் ஒன்பது சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதில் ஒரு சிங்கம் கொரோனாவால் உயிரிழந்தது என்பதும் தெரிந்ததே. இதனையடுத்து யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
முதுமலை டாப்சிலிப் முகாமில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மருத்துவ குழு விரைந்தது. அங்கு 28 யானைகளுக்கும் கோரோனோ பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கும் பணி நடந்தது. யானைகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உத்தரபிரதேச மாநிலம் இசாட்நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்படவுள்ளது.
 
முதுமலை டாப்சிலிப் முகாமில் 2 குட்டி யானைகள், 5 கும்கி யானைகள் உட்பட 28 வளர்ப்பு யானைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் முன்னுரிமை அடிப்படையில் பாகன்கள் உள்ளிட்ட 52 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments