Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் 4 சிங்கங்களுக்கு கொரொனா...மக்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (18:34 IST)
வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் 4 சிங்கங்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 10 சிங்கங்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் இரண்டு சிங்கங்கள் தொற்று பாதிப்பால் உயிரிழந்தன.

இந்த சம்பவம் விலங்குகள் நல ஆர்வலர்கள், பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பூங்காவில் உள்ள மற்ற சிறுத்தை, புலி போன்ற விலங்குகளுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று சென்னை அருகேயுள்ள வண்டலூர் பூங்காவில் மேலும் 4 சிங்கங்களுக்குக் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

4 சிங்கங்களுக்கு இந்தியாவில் வேகமாகப் பரவி  வரும் டெல்டா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.

இந்த சிங்கங்களை விரைவில் குணப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments