Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கப்பலேற்றிய தமிழர்கள்? அன்று கனிமொழி, இன்று சிதம்பரம் – சி.வி.சண்முகம் குற்றசாட்டு

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (19:18 IST)
கனிமொழி, சிதம்பரம் போன்றவர்கள் தமிழக மானத்தை கப்பலேற்றிவிட்டதாக தமிழக சட்ட துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சாடியுள்ளார்.

விழுப்புரத்தில் நடந்த ஆட்சியர் அலுவலக திறப்பு விழாவில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ப.சிதம்பரம் யோக்கியர் கிடையாது. இந்தியாவின் நிதியை வெளிநாட்டிற்கு கொள்ளையடித்த மிகெப்பெரிய குற்றவாளி அவர். டெல்லி உயர்நீதிமன்றமே இது கண்டிப்பாக விசாரிக்க வேண்டிய குற்றம் என கூறியுள்ளது.

ஏற்கனவே கனிமொழியால் தமிழக மானம் கப்பல் ஏறியது. இன்று சிதம்பரம் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளார். எங்களை சிறைக்கு அனுப்புவேன் என கூறியவர்களை கடவுளாய் பார்த்து களி திண்ண வைத்துள்ளார். பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments