Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை.. 30ஆம் தேதி வரை வாபஸ்..!

Mahendran
வியாழன், 28 மார்ச் 2024 (07:51 IST)
தமிழகத்தில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் இன்று முதல் வேட்பாளர்கள் பரிசீலனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் 20 முதல் வேட்புமனு  தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில் நேற்று மாலைடன் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இன்று முதல் வேட்புமனு  பரிசீலனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை செய்யப்பட இருப்பதாகவும் 40 தொகுதிகளில் தனித்தனியாக நியமிக்கப்பட்ட பொது பார்வையாளர்கள் முன்னிலையில் வேட்பு மனுக்கள் மீது பரிசினை நடைபெறும் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

மேலும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை வாபஸ் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் என்றும் அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

ரூ.55,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! – மிஸ் பண்ணிடாதீங்க!

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments