Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதந்திர தினத்தில் ஆளுனரின் தேநீர் விருந்து.. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பு..!

Siva
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (11:24 IST)
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் கவர்னர் தனது மாளிகையில் தேநீர் விருந்து வைக்கும் நிலையில் இந்த ஆண்டும் அது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தேநீர் விருந்தை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாளை மறுநாள் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற இருக்கும் நிலையில் சுதந்திர தின கொடியேற்றத்துக்கு பிறகு ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
 
தேநீர் விருந்துக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த இரு கட்சிகளும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாநில நலனுக்கும் மாநில அரசுக்கும் எதிராக ஆளுநர் செயல்படுவதால் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
 
ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் அனைத்து கட்சியினர் தேநீர் வழங்க ஏற்பாடு செய்திருக்கும் நிலையில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் தவிர மற்ற கட்சிகள் இதுவரை தேநீர் வசதி புறக்கணிப்பதாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பாக திமுக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் இன்று முதல் ஐபோன் 16 சீரிஸ் விற்பனை: வரிசையில் காத்திருக்கும் ஆப்பிள் ஆர்வலர்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: பெயர் குழப்பம் குறித்து ஆட்சியர் விளக்கம்..!

பேஜர் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு தண்டனை கொடுப்போம்! - ஹிஸ்புல்லா தலைவர் சபதம்!

2 சிறுவர்கள் கொடூர கொலை.. கடன் பிரச்சினையில் நண்பன் செய்த கொடூரம்? - குடியாத்தம் அருகே அதிர்ச்சி சம்பவம்!

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல்: மும்முனை போட்டியில் வெற்றி பெறுவது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments