Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 தொகுதிகளை குறி வைக்கும் காங்கிரஸ்.. 5 தொகுதிகளுக்கு மேல் இல்லை என்கிறது திமுக?

Siva
புதன், 10 ஜனவரி 2024 (07:41 IST)
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலில் 10 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ராகுல் காந்தி பாதயாத்திரைக்கு பின்னர் காங்கிரஸ் வளர்ச்சி பெற்றிருப்பதாகவும் எனவே 18 தொகுதிகளை திமுகவிடம் கேட்டு பெற வேண்டும் என்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் கூறி வருவது ஏற்படுத்தி உள்ளது.  

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலில் திருவள்ளூர், ஆரணி, திருச்சி, கரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி, புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ஒருவர் கூறிய போது ராகுல் காந்தியின் ஒற்றுமை பாத யாத்திரைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஆதரவு அளித்துள்ளது. எனவே திமுகவுடன் 18 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்றும் அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
ஆனால்  திமுக கூட்டணியில் பாமக, மக்கள் நீதி மய்யம் உள்பட ஒரு சில கட்சிகள் கூடுதலாக வர இருப்பதால்  காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments