Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பை ஜாதி பிரச்சனையாக்கும் அரசியல்வாதிகள்

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (11:12 IST)
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் மரணமடைந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கி உள்ள நிலையில் இந்த பிரச்சனையை காங்கிரஸ் மற்றும் பாஜக வினர் ஜாதிப் பிரச்சனையாக கொண்டு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் ’ஜெயராஜ் நாடார், பெனிக்ஸ் இம்மானுவேல் நாடார் ஆகியோர் காவல்துறையினரால் அடைத்து வைக்கப்பட்ட போது கடுமையாக தாக்குதலின் காரணமாக இறந்திருப்பதினால் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று 
குறிப்பிட்டுள்ளார் 
 
சாத்தான்குளம் சம்பவம் குறித்த செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் நாடார் என்ற சாதிப் பெயர் இல்லாமல் தான் வந்த நிலையில் கேஎஸ் அழகிரி மட்டும் தனது அறிக்கையில் நாடார் என்ற சாதிப் பெயரை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டது பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன
 
இதேபோல் பாஜகவில் சமீபத்தில் இணைந்த சசிகலா எம்பி ’நாடார் சமூகத்தில் சமுதாயத்தில் ஒருவர் மீது பிரச்சனை என்றால் தமிழக பாஜக உங்களோடு நிற்கும்’ என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் இந்த பிரச்சினையை ஜாதிப் பிரச்சனையாக மாற்றுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

தொழிற்சாலை பாய்லர் வெடித்து தீ விபத்து: 10 பேர் பலி.. 48 பேர் காயம்..!

மனைவியை அபகரித்து சொத்தையும் கேட்ட கட்சி தலைவர்! ஆள் வைத்து கதை முடித்த காங். பிரமுகர்!

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments