Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நீதி மய்யம் முடக்கம்? கமல் கட்சி துவங்கிய நேரம் சரியில்லையோ...

Webdunia
வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (20:02 IST)
கமல் தனது கட்சியை துவங்கியது முதல் சிக்கல்களை சந்தித்து வருகிறார். முதலில் கட்சியின் சின்னம் முன்பை தமிழ்ச்சங்கத்தில் இருந்து சுடப்பட்டதாக சிக்கல் வந்தது. தற்போது கட்சியின் பெயருக்கு சிக்கல் வந்துள்ளது. 
 
தமிழ்நாடு ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் நல சங்கம் என்ற அமைப்பின் சார்பில் கம்ல் கட்சியின் பெயரை முடக்க கூறி தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த புகாரில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது, நடிகர் கமல் துவங்கியுள்ள புது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயரிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற அங்கீகாரமுள்ள மக்கள் நீதிமன்றத்தை அணுகும் பொதுமக்களை திசை திருப்பும் வகையில் இது உள்ளது. 
 
எந்த ஒரு சட்ட வலிமையும் இல்லாத தன் கட்சியை மக்கள் நீதி மன்றத்திற்கு இணையான பெயர் சூட்டி மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார் கமல். 
 
மக்களை ஏமாற்றும் வகையிலும் மக்கள் நீதிமன்ற மாண்பை சிதைக்கும் வகையிலும், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கமல் கட்சி செயல்பட தடை விதிக்க வேண்டும் எனவும் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments