Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணிவு படத்திற்கு போன ரசிகர் உயிரிழப்பு! நடிகர் அஜித் மீது புகார்!

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (11:38 IST)
துணிவு படம் பார்க்க சென்ற அஜித் ரசிகர் உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அஜித் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அஜித்குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள துணிவு படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கத்தில் துணிவு படம் பார்க்க சென்ற 19 வயது இளைஞர் பரத் என்பவர் அங்கு சென்ற டேங்கர் லாரி மீது ஏறி ஆடியபோது தவறி விழுந்து உயிரிழந்தார்.

இந்த உயிரிழப்பு சம்பவத்தில் சமூக ஆர்வலரான ஆர்டிஐ செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் துணிவு படம் பார்க்க சென்ற இளைஞர் பரத் மரணத்திற்கு நடிகர் அஜித் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தலா ரூ.1 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என புகாரளித்துள்ளார்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments