Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஞ்சா ரெய்டில் விசாரணை.. தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை

Siva
புதன், 4 செப்டம்பர் 2024 (07:28 IST)
கஞ்சா ரெய்டு செய்த பின்னர் விசாரணை செய்ததால் தனியார் கல்லூரி மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன் செங்கல்பட்டு அருகே உள்ள தனியார் கல்லூரியில் கஞ்சா புழக்கம் இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்ததை அடுத்து அதிரடியாக கல்லூரி மாணவர்களை விடுதியில் சோதனை செய்யப்பட்டது. 
 
இந்த சோதனையில் கஞ்சா உள்பட போதைப் பொருள்கள் சிக்கியதாகவும் இதனை அடுத்து சில மாணவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததாகவும் செய்திகள் வெளியானது. 
 
இந்த நிலையில் விசாரணை செய்யப்பட்ட மாணவர்களின் ஒருவர் போலீஸ் விசாரணைக்கு பின் மன உளைச்சலில் இருந்ததாகவும் இதனையடுத்து  திடீரென அவர் கல்லூரியின் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது. இந்த அதிர்ச்சி சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments