Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்..!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (15:27 IST)
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவர் ஒருவர் உயிர் இழந்ததாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஒரு பக்கம் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இன்னொரு பக்கம் புதுச்சேரியில் கல்லூரி மாணவி ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். 
 
புதுச்சேரியை அடுத்த குருபாம்பேட்  என்ற பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி காயத்ரி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அதனை அடுத்து அவருக்கு சோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. 
 
இதனை அடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி இன்று காலை உயிரிழந்து உள்ளார். டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி உயிரிழந்திருப்பது புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments