Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலி சரக்கு பாட்டிலை சேர்த்து டெபாசிட் பணம் : மது குடிப்போர் சங்கம் அதிரடி

காலி சரக்கு பாட்டிலை சேர்த்து டெபாசிட் பணம் : மது குடிப்போர் சங்கம் அதிரடி

Webdunia
புதன், 26 அக்டோபர் 2016 (12:11 IST)
தஞ்சாவூர் தொகுதியில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும், மது குடிப்போர் சங்க வேட்பாளர், வித்தியாசமான முறையில் பணம் திரட்டி டெபாசிட் செய்ய முடிவெடுத்துள்ளார்.


 

 
தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில், வருகிற நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கியது.
 
இந்நிலையில், தஞ்சாவூர் தொகுதியில் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் ஆறுமுகம் என்பவர் போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிட டெபாசிட் பணம் திரட்ட, அந்த சங்கத்தினர் ஒரு வித்தியாசமான முடிவை எடுத்துள்ளனர்.


 

 
அதாவது, நாளை தஞ்சாவூர் செல்லும் ஆறுமுகம், அங்கு உள்ள டாஸ்மாக் கடைகளில் மது அருந்துபவர்களிடம் காலி பாட்டில்கள், வாட்டர் பாக்கெட்டுகள், டம்ளர்கள் ஆகியவற்றை சேர்த்து அதை கயலான் கடையில் போட்டு, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் டெபாசிட் தொகையை அவர் கட்ட இருக்கிறாராம்..
 
இதன்மூலம், கண்ட இடங்களில் காலி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி, டெங்கு போன்ற நோய்களை பரவ விடமால் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்று மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அறிவித்துள்ளது.
 
இது எப்படி இருக்கு?...

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments