Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் தற்கொலை! – தடை செய்யப்படுமா ரம்மி?

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (11:21 IST)
ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் தொடர்ந்து பலர் தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில் தற்போது கோவையில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக ஆன்லைன் சூதாட்டங்களினால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த மதன்குமார் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மி மோகத்தால் பல இடங்களில் கடன் வாங்கி பணத்தை இழந்துள்ளார். இதனால் மன விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கடந்த 10 நாட்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டது போல ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments