Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா-அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்!

J.Durai
புதன், 24 ஏப்ரல் 2024 (15:01 IST)
கோவை-அவிநாசி சாலை உப்பிலிபாளைத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 
தொடர்ந்து தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.அப்போது பல்வேறு சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.தொடர்ந்து மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது.
 
இதைத் தொடர்ந்து இன்று காலை சக்தி கரகம்,அக்னி சட்டி புறப்பாடு ஊர்வலம் கோனியம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக டவுன் ஹால்,ஒப்பனைக்கார வீதி, லிங்கப்பசெட்டி வீதி,பால் மார்கெட், புரூக் பாண்டு ரோடு,நஞ்சப்பா ரோடு வழியாக அவிநாசி சாலை மேம்பாலத்தை ஒட்டி அக்னிச்சட்டி ஏந்தியும்,பால்குடம் எடுத்தும்,சக்தி கரகம் எடுத்தும்,அலகு குத்தியும் ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக தண்டு மாரியம்மன் கோவில் வந்தடைந்தனர்.
 
தண்டு மாரியம்மன் கோவில் ஊர்வலத்தில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை டவுன்ஹால், அவிநாசி சாலை ஆகிய பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
பாதுகாப்பு பணிக்காக 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments