Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணிப்பை கொண்டு வந்தால் தள்ளுபடி..! – நடைபாதை வியாபாரிகள் அசத்தல் முயற்சி!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (16:10 IST)
கோவையில் துணிப்பை கொண்டு வந்து காய்கறிகள், பழங்கள் வாங்கினால் தள்ளுபடி என நடைபாதை வியாபாரிகள் அறிவித்துள்ளதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பையின் பயன்பாட்டை குறைக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பை முன்னிறுத்தி மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கோவையில் நடைபாதை வியாபாரிகள் சிலர் துணிப்பை கொண்டு வந்து காய்கறி, பழங்கள் வாங்குபவர்களுக்கு விலையில் ரூ.5 தள்ளுபடி என அறிவித்துள்ளனர். இதனால் மக்கள் பலரும் துணிப்பை கொண்டு வந்து காய்கறி, பழங்கள் வாங்கி செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடைபாதை வியாபாரிகளின் இந்த முயற்சியை பலரும் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments