Webdunia - Bharat's app for daily news and videos

Install App

களைக்கட்டிய ரேக்ளா ரேஸ்: 500 மாட்டு வண்டிகள் பங்கேற்பு!

Webdunia
ஞாயிறு, 19 ஜனவரி 2020 (12:34 IST)
பொங்கலையொட்டி கோயம்புத்தூர் பகுதியில் நடைபெறும் ரேக்ளா பந்தயம் இன்று விமரிசையாக நடைபெற்று வருகிறது.

தமிழர் திருநாளான பொங்கலையொட்டி தமிழகம் முழுவதும் காளைகளை கொண்டு பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் மதுரை உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள், மற்ற பகுதிகளில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டிகளை போல கொங்கு பகுதிகளில் நடைபெறும் மாட்டுவண்டி பந்தயமான ரேக்ளா ரேஸ் மிகவும் பிரபலமானது.

எட்டிமடையில் இன்று நடைபெறும் ரேக்ளா போட்டியில் 500 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டுள்ளன. 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் ஆகிய இரண்டு பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டியில் முதல் பரிசாக வீட்டு மனையும், 2வது மற்றும் 3வது பரிசாக தங்க நாணயங்களும் வழங்கப்பட உள்ளன.

இந்த போட்டியை காண கோயம்புத்தூர், எட்டிமடை சுற்றுவட்டாரத்திலிருந்து மக்கள் பலர் ஆர்வமாக வருகை புரிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments