Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் அதிகம் கூடும் இதர இடங்களில் சிறப்பு ரோந்து படைகள்.. முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (17:26 IST)
பள்ளி, கல்லூரிகள் மற்றும் பெண்கள் அதிகம் கூடும் இதர இடங்களில் சிறப்பு ரோந்து படைகள் மூலம் கண்காணித்து தவறு செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்த கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
 
தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழவும், தொழில் வளம் மிகுந்த மாநிலமாக மேலும் வளர்ச்சி பெறவும், குற்ற நிகழ்வுகளை தடுத்திடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
 
அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆகையால், இந்தக் காலகட்டத்தில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை உருவாகாமல் மிக மிகக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
 
குழந்தைகளைத் துன்புறுத்துபவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து 
60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும்’ என்று கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை எதிர்ப்பதை விட்டுட்டு உங்க கொள்கை என்னன்னு சொல்லுங்க! - விஜய்க்கு சரத்குமார் கேள்வி!

10ஆம் வகுப்பு படித்து 10 வருடமாக போலி டாக்டராக இருந்த பெண்.. அதிரடி கைது..!

வறண்ட வானிலை.. அதிகரிக்கும் வெப்பநிலை!? - வானிலை ஆய்வு மையம்!

தொண்டையில் மாட்டின் கொம்பு குத்தி வாலிபர் பரிதாப பலி.. குமாரபாளையம் ஜல்லிக்கட்டில் சோகம்..!

கொள்கை தலைவர்களின் சிலை திறப்பு.. மலர் தூவி மரியாதை செய்த விஜய்..!

அடுத்த கட்டுரையில்
Show comments