Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (20:10 IST)
சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
 
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 56 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பொங்கல் பண்டிகை வரவிருப்பதை அடுத்து இந்த பண்டிகையை மீனவர்கள் சந்தோசமாக கொண்டாடும் வகையில் அதற்கு முன்னரே விடுவிக்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
 
முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசு தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments