இரவு நேர ஊரடங்கு ரத்தா? நாளை முதல்வர் முக்கிய ஆலோசனை!

Webdunia
புதன், 26 ஜனவரி 2022 (11:22 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகியவை ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் இந்த ஊரடங்கை நீடிப்பதா அல்லது தளர்வுகள் அறிவிப்பதா? என்பது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நாளை ஆலோசனை செய்ய உள்ளார்.
 
மருத்துவ நிபுணர்கள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை செய்த பின்னர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஞாயிறு அன்று பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்றும்  இரவு நேர ஊரடங்கிலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments