Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடி ஒளியும் எஸ்.வி.சேகருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் பழனிசாமி

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (13:38 IST)
ஏதாவது ஒன்றைச் சொல்லிவிட்டு வழக்கு என்று வந்தால் ஓடி ஒளிந்துகொள்ளும் எஸ்வி சேகருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் அதிமுக கொடி குறித்து எஸ்வி சேகர் விமர்சனம் செய்ததும், அதனை அடுத்து அதிமுக எம்எல்ஏவாக இருந்த போது வாங்கிய சம்பளத்தை எஸ்வி சேகர் திருப்பித் தருவாரா? என அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் எஸ்வி சேகர்-ஜெயக்குமார் மோதல் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ’எஸ்வி சேகர் ஏதாவது பேசி விட்டு வழக்கு என்று வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார் என்றும், அதனால் அவர் கேட்டதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார் 
 
மேலும் எஸ்வி சேகர் எந்த கட்சியில் இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் அவர் அதிமுகவில் இருந்த போதே நாங்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் போது ஒரு நாள் கூட எங்களுடன் பிரச்சாரத்திற்கு வந்ததில்லை என்றும் அவர் தெரிவித்தார்
 
ஒரு கருத்தை தெரிவித்து விட்டு அந்த கருத்தால் பிரச்சனை ஏற்படும் போது ஓடி ஒளிந்துகொள்ளும் எஸ்வி சேகரை கண்டுகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments