நெல்லையை அடுத்து மதுரையில்.. அதிமுக ஆய்வுக்குழு கூட்டத்தில் அடிதடி..!

Siva
திங்கள், 25 நவம்பர் 2024 (13:40 IST)
நெல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் கள ஆய்வுக் கூட்டத்தில் இரு கோஷ்டியினர் அடிதடி செய்து மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று மதுரையில் நடந்த அதிமுக ஆய்வு குழு கூட்டத்திலும் அடிதடி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக துணை பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் செம்மலை ஆகியோர் முன்னிலையில் மதுரையில் இன்று கள ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் செல்லூர் ராஜு கோஷ்டி மற்றும் டாக்டர் சரவணன் கோஷ்டி நேருக்கு நேர் மோதிக்கொண்டு, தங்களை ஏன் பேச அனுமதிக்கவில்லை என கூறியதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அமைதியாக இருக்கும்படி, மைக்கில் வேண்டுகோள் விடுத்தும் கட்சி நிர்வாகிகள் அவரது பேச்சை மதிக்காமல் அடிதடிகளில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லையில் அதிமுக ஆய்வு கூட்டத்தில் அடிதடி, மதுரையில் கள ஆய்வுக் கூட்டத்தில் அடிதடி என தொடர்ச்சியாக அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அடிதடி சண்டை நடந்து வருவது, அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments