Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூதாட்டியை பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் ஒரு சிறுவன் கைது!

மூதாட்டியை பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் ஒரு சிறுவன் கைது!

Webdunia
வியாழன், 11 மே 2017 (18:04 IST)
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சிறுவர்கள் கும்பல் ஒன்று தனியாக செல்லும் பெண்களை கடத்தி குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு சென்று அவர்களை பலாத்காரம் செய்த வழக்கில் தற்போது மேலும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.


 
 
அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த 63 வயதான பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் தனியாக வந்து கொண்டிருந்தபோது கண்ணுப் பொத்தை காட்டுப்பகுதிக்கு சிலரால் கடத்தப்பட்டார். அங்கு அவர்கள் அந்த 63 வயதான பெண்ணை பலாத்காரம் செய்து பின்னர் தனது நண்பர்கள் சிலரையும் வரவழைத்து கும்பலாக சீரழித்துள்ளனர்.
 
63 வயதான அந்த மூதாட்டியை பலாத்காரம் செய்து பின்னர் தலையில் கல்லைப் போட்டு கொன்றுள்ளனர் அவர்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக 17 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர். தலைமைறைவாக இருந்த மீதமுள்ள 4 பேரை தீவிரமாக தேடிவந்தனர் போலீசார்.
 
முதலில் கைது செய்யப்பட்ட சிறுவனிடம் நடத்திய விசாரணயில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. தனியாக பெண் யாராவது சிக்கினால் அவர்களை கடத்தி அதே கண்ணுப் பொத்தை பகுதிக்கு கொண்டு வந்து பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்து வந்துள்ளது இந்த கும்பல்.
 
இவர்களின் இந்த வெறிச்செயலுக்கு இதுவரை 6 பெண்கள் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த கும்பலில் உள்ள மற்றொரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். கைது செய்யப்பட்டுள்ள 2 சிறுவர்களையும் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் போலீசார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டமன்றத்தில் அமளி; அதிமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்! – சபாநாயகர் விளக்கம்!

300 கோடி மோசடி செய்த வழக்கு-கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3.20 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்த குற்றப்பிரிவு போலீசார்!

ஈஷாவில் களைக்கட்டிய உலக யோகா தின விழா! நூற்றுக்கணக்கான CRPF வீரர்கள் பங்கேற்பு!

இன்றும் நாளையும் கிரிவலம் நாள்.. தமிழக அரசு செய்த சிறப்பு ஏற்பாடுகள்..!

தமிழ்நாட்டில் 3 நாட்கள் அதி கனமழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments