Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக் காதலிக்கு மேலும் ஒரு கள்ளக் காதலன்: கட்டிப்போட்டி சித்திரவதை!

கள்ளக் காதலிக்கு மேலும் ஒரு கள்ளக் காதலன்: கட்டிப்போட்டி சித்திரவதை!

Webdunia
வியாழன், 11 மே 2017 (17:33 IST)
திருவண்ணாமலையில் கணவனை விட்டுவிட்டு கள்ளக் காதலனுடன் வசித்து வந்த பெண் அடுத்ததாக வேறொரு ஆணுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டதால் கள்ளக் காதலனால் கட்டிபோட்டு சித்தரவதை செய்யப்பட்டுள்ளார்.


 
 
திருவண்ணாமலை உத்திரமல்லூரில் முருகேசன், கிருஷ்ணவேணி தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்களது வீட்டிற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜேந்திரன் என்பவர் எலக்ட்ரீஷியன் வேலைக்கு சென்றுள்ளார். வேலைக்கு சென்ற இடத்தில் ராஜேந்திரனுக்கு முருகேசனின் மனைவி கிருஷ்ணவேணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 
இந்த பழக்கம் கள்ளக் காதலாக மாற இருவரும் ஓடிப்போய் ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பித்தனர். இதனால் ராஜேந்திரனின் மனைவி தனது மகனுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ராஜேந்திரனுடன் ஓடி வந்து ஒரே வீட்டில் வசிக்கும் கிருஷ்ணவேணிக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 
இந்த விவகாரம் கள்ளக்காதலன் ராஜேந்திரனுக்கும் தெரியவர அவர் கிருஷ்ணவேணியிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து  அவர் கிருஷ்ணவேணியை அடித்து கட்டிப்போட்டு வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
 
கிருஷ்ணவேணியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கிருஷ்ணவேணியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தப்பியோடிய கள்ளக் காதலன் ராஜேந்திரனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments