Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனு கொடுக்க வந்த டிஆர் பாலுவை அவமதித்தேனா? தலைமைச்செயலாளர் விளக்கம்

மனு கொடுக்க வந்த டிஆர் பாலுவை அவமதித்தேனா? தலைமைச்செயலாளர் விளக்கம்
, வியாழன், 14 மே 2020 (20:05 IST)
தலைமைச்செயலாளரிடம் மனு கொடுக்க வந்தபோது, அவர் டி.வியைப் பார்த்துக்கொண்டு தங்களை அவமதித்ததாக திமுக எம்.பி டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டிய நிலையில் இதுகுறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
 
கடுமையான பணிகளுக்கு இடையே திமுகவினருக்கு நேரம் வழங்கப்பட்டது. அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டது. அத்துடன் ஒரு லட்சம் மனுக்களைப் பிரித்து அனுப்புவது பெரும் பணி என்பதால், எத்தனை நாட்கள் ஆகும் தற்போது கூறமுடியாது என திமுகவினரிடம் தெரிவிக்கப்பட்டது.
 
ஆனால் எங்கள் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல் திமுகவினர் பத்திரிகைகளில் தங்களை அவமதித்ததாகச் செய்திகள் வெளியிட்டுள்ளனர். உண்மையில் எனக்கு திமுகவையோ எதிர்க்கட்சித் தலைவரையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை. இவ்வாறு தலைமைச் செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவங்க இரண்டு பேர்களையும் என்கவுண்டர் செய்ய வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்