Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட தொகை உயர்வு...

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2018 (13:02 IST)
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் உயர் மருத்துவ சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாமல் சிரமப்படுவதை உணர்ந்த அரசு மக்களின் மனச்சுமையை குறைக்கவே முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது. 
அதில் பல கோடி மக்கள் இணைந்து நல்ல முறையில் சிகிச்சை பெற்று பயனாளர்களாக தொடர்கிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு மேலும் மகிழ்சியான செய்தியாக இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுருக்கிறார்.
 
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
 
பயனாளிகளின் கோரிக்கையை  ஏற்று காப்பீடு தொகையை  அதிகரிக்கப்பட்டுள்ளது.  இந்தக்  காப்பீடு தொகை  உயர்வு திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.  
 
முதல்வரின் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறுவதற்கான தொகை ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
 
இத்திட்டம் மூலம் இனி ஆண்டுக்கு ரூ.5 லட்சம் ரூபாய் வரையில் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். 
 
இதுவரை 1.58 கோடி குடும்பத்தினர் முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ளனர்.
 
இப்புதிய திட்டம் நாளை முதல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பயனாளர்கள் ஆண்டுக்கு   ரூ. 5 லட்சத்திற்கு  கட்டணமின்றி சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments