Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் ஏறி தேவாரம் பாடிய சிவனடியார்கள்.. 40 பேர் கைது

Mahendran
சனி, 4 மே 2024 (13:24 IST)
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் ஏறி சிவனடியார்கள் தேவாரம் பாடிய  நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி தமிழ் வேத ஆகம பாடசாலை நிறுவனர் சேலம் சத்தியபாமா உள்ளிட்ட சிவனடியார்கள் தேவாரம் பாடினர். மேலும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம், திருவாசகம், சிவபுராணம் பாடி சங்கு ஊதும் போது கனகசபையில் சலசலப்பு ஏற்பட்டது.
 
கனகசபை மீது ஏறி தமிழ் வேத ஆகமம் பாடுவதற்கு தீட்சிதர்கள் இடையூறு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சிவனடியார்களை போலீசார் வெளியே அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மேலும் சேலம் சத்தியபாமா உள்ளிட்ட 40 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொன்ன விஜய்.. என்ன காரணம்?

சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி

விஷச்சாராய மரணம் குறித்து இந்தியா கூட்டணி பேசாதது ஏன்.? திமுக என்பதால் மௌனமா.? எல்.முருகன் கேள்வி..!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..! 35 பேரின் மனுக்கள் நிராகரிப்பு..!!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை.! தமிழக ஆளுநரிடம் அண்ணாமலை மனு..!

அடுத்த கட்டுரையில்
Show comments