Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் கடும் ஊரடங்கு; வெளியே வந்தால் கடும் நடவடிக்கை! – காவல் ஆணையர் அறிவுறுத்தல்

Webdunia
ஞாயிறு, 23 மே 2021 (16:59 IST)
தமிழகம் முழுவதும் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இரண்டு வாரமாக தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் இருந்து வந்தது. எனினும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நாளை முதல் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இன்று மக்கள் பொருட்களை வாங்க கடை வீதிகளில் குவிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாளை முதல் எந்த தளர்வுமின்றி ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் அனைத்து பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா ஊரடங்கு பணிகளை கண்காணிக்க 20 ஆயிரம் போலீஸார் ஈடுபட உள்ளனர். ஊரடங்கை மீறி வெளியே வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் நாளை முதல் இணைப்பு சாலைகள், சிறிய சாலைகள், மேம்பாலங்கள் மூடப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments