Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பேருந்து ஊழியர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை! – சென்னை மாநகர போக்குவரத்து!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (12:35 IST)
தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் கட்சி சார்ந்த தேர்தல் பணிகளில் ஈடுபட கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.

தமிழகத்திற்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் சார்பாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் சிலர் பணிபுரிய உள்ளனர். அவர்கள் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் வருவதால் தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை தவிர கட்சிகளுக்கு எந்த விதமான உதவிகளும் செய்யக்கூடாது என கூறப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் பணியில் இல்லாத அரசு ஊழியர்களும் தேர்தல் பிரச்சாரம், வாக்குச்சாவடி அருகே கட்சி சார்பான விளக்கமளித்தல் போன்றவற்றில் ஈடுபட வேண்டாம் எனவும், அவ்வாறு ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments