Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன இப்படி கிளம்பிட்டாய்ங்க..! அதிகரிக்கும் பெட்ரோல் திருட்டு! – சென்னையில் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (10:49 IST)
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில் தற்போதைய பெட்ரோல் விலை ரூ.100 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் டீசல் விலையுமே ரூ.100 ஐ தாண்டியுள்ளது. தலைநகர் சென்னையிலும் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது.

இந்நிலையில் சமீப காலமாக பெட்ரோல் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பலர் இரவு நேரங்களில் வளாகங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றிலிருந்து பெட்ரோல் திருடுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை அம்பத்தூரில் குடியிருப்பு வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் நுழைந்து பைக்கிலிருந்து பெட்ரோல் திருடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. பெட்ரோல் விலை உயர்வால் திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments