சென்னை சாலைகள் படுமோசம்- நடிகர் விஜயகாந்த் கண்டனம்

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (14:07 IST)
‘சென்னை முழுவதும் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூடி, பயனற்று கிடக்கும் சாலைகளை உடனடியாக சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு  தமிழ்நாடு அரசு கொண்டு வர வேண்டும்’ என  நடிகர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

இதுகுறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

‘’மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள், மழை நீர் வடிகால் பணிகள், புதை மின் வடம் பதிப்பு உள்ளிட்ட பணிகளால், சென்னையில் உள்ள அனைத்து சாலைகளும் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் படுமோசமாக உள்ளன.

சாலை வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் மக்களிடம் இருந்து வசூலிக்கும் திமுக அரசு, சேதமடைந்த சாலைகளை சீரமைக்காமலும், நல்ல நிலையில் உள்ள சாலைகளை சேதப்படுத்துவதையும் வன்மையாக கண்டிக்கிறேன்.

சென்னை முழுவதும் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூடி, பயனற்று கிடக்கும் சாலைகளை உடனடியாக சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

அடுத்த கட்டுரையில்
Show comments