3 நாட்களாக முடங்கியிருந்த பாஸ்போர்ட் இணையதள சேவை.. இப்போதைய நிலை என்ன?

Siva
திங்கள், 2 செப்டம்பர் 2024 (12:36 IST)
கடந்த மூன்று நாட்களாக பாஸ்போர்ட் இணையதள சேவை முடங்கி இருந்த நிலையில் இன்று முதல் சீரானது என தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த 29ஆம் தேதி இரவு 8 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பாஸ்போர்ட் இணையதள சேவை முடக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக மூன்று நாட்களாக முடக்கி வைக்கப்பட்ட பாஸ்போர்ட் இணையதள சேவை தற்போது சீரானதாகவும் இன்று காலை முதல் இந்த இணையதளம் பயன்பாட்டுக்கு வந்தது என்றும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 30ஆம் தேதி நேர்காணல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த நேர்காணல் குறித்த தகவல் எஸ்எம்எஸ் மூலம் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்களாக முடங்கி இருந்த பாஸ்போர்ட் இணையதள சேவை தற்போது சீரானதை அடுத்து பாஸ்போர்ட் எடுக்கும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments