Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் 4 சுங்கச் சாவடிகள் மூடல்! – வாகன ஒட்டிகள் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (09:35 IST)
தமிழக சட்டசபையில் அறிவித்தப்படி இன்று முதல் சென்னை அருகேயுள்ள 4 சுங்கச்சாவடிகள் மூடப்பட்டுள்ளன.

சென்னையில் கடந்த 12 ஆண்டுகளில் ஐடி நிறுவனங்கள் அதிகரிப்பால் சாலைகள் மேம்படுத்தப்பட்டன. இதனால் அப்போதைய பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளாக இருந்த பெருங்குடி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், மேடவாக்கம் சாலை, கலைஞர் சாலை ஆகிய நான்கு இடங்களில் சுங்கசாவடிகள் அமைக்கப்பட்டன.

ஆனால் தற்போது அவை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுவிட்ட நிலையில் தொடர்ந்து சுங்கசாவடிகள் செயல்பட்டு வருவது வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் மெட்ரோ பணிகள் தொடங்கப்படுவதால் இந்த சுங்கசாவடிகள் செயல்படாது என சட்டசபையில் அமைச்சர் ஏ.வெ.வேலு கூறியிருந்தார்.

அதன்படி இன்றுமுதல் மேற்கண்ட 4 சுங்க சாவடிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு.. ஒரு சவரன் ரூ.65000ஐ நெருங்கியது..!

பிரயாக்ராஜ் விமான நிலையம் முதல் திரிவேணி சங்கமம் வரை ஹெலிகாப்டர் சேவை.. கட்டணம் எவ்வளவு?

தமிழ் நிலக் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்! தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

ரயிலில் நிக்கக் கூட இடம் இல்ல.. ஆத்திரத்தில் ஏசி கோச்சை உடைத்த பயணிகள்! - கும்பமேளாவில் பரபரப்பு!

RRB Recruitment: SSLC பாஸ் போதும்..! ரயில்வேயில் 32,438 பணியிடங்கள்! - விண்ணப்பிப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments