Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்னும் 3 மணி நேரத்தில் கொட்டப்போகுது கனமழை: எந்தெந்த மாவட்டஙகளில்?

Advertiesment
rain
, வியாழன், 17 நவம்பர் 2022 (07:24 IST)
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் கன மழை கொட்ட போகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூர், திருப்பூர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இதனை அடுத்து மேற்கண்ட மாவட்ட நிர்வாகங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

64.13 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!