Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Webdunia
ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (13:08 IST)
நாளை முதல் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை எதுவும் இல்லை என்பதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது என்பதும் தெரிந்ததே. மேலும் கோடை காலம் தொடங்க உள்ளதை அடுத்து படிப்படியாக வெயில் அதிகரித்து வருகிறது என்பதும் ஒரு சில பகுதிகளில் 100 டிகிரி செல்சியஸ் வெயில் இப்போதே தொடங்கி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் நாளை முதல் மார்ச் 1ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் கீழ் திசை காற்றால் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பிப்ரவரி 27 முதல் மார்ச் 1ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் மற்ற பகுதிகளில் தொடர்ந்து வறண்ட வானிலை தான் நிலவும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments