Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் கொளுத்தும்: வானிலை மையத்தின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி..!

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (14:44 IST)
தமிழகத்தில் இன்றும் நாளையும் வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. மீண்டும் அக்னி நட்சத்திரம் கிளம்பிவிட்டதோ என்ற ஐயம் ஏற்படும் அளவிற்கு வெப்பநிலை அதிகமாக பதிவாகி வருகிறது. 
 
இந்த நிலையில் இன்றும் நாளையும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்றும் 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள தகுந்த நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments