சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம்.. முழு விவரங்கள்..!

Webdunia
ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (16:07 IST)
நாளை ஆயுத பூஜை திருநாளை முன்னிட்டு நாளைய சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தெற்கு ரயில்வே சார்பில் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில் வழக்கமாக பொது விடுமுறை நாட்களில் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்குவது வழக்கம். 
 
அந்த வகையில் நாளை திங்கட்கிழமையாக இருந்தாலும் ஆயுத பூஜை விடுமுறை என்பதால் சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். 
 
சென்ட்ரல் - அரக்கோணம்,  சென்ட்ரல் - சூளூர்பேட்டை, கடற்கரை - செங்கல்பட்டு மற்றும் விரைவு மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments