Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வாக்குச்சீட்டு முறையா? சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (12:12 IST)
தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே மீண்டும் வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் உள்பட பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர் 
 
இது குறித்த வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தேர்தல்களில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டது 
 
இதனை அடுத்து இனிவரும் தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தான் தேர்தல் நடக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டாலும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
எனவே யூகங்களின் அடிப்படையில் வரும் குற்றச்சாட்டுகளுக்கு செவிகொடுத்து வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments