Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அண்ணாநகர் டவர் கிளப் கட்டிடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

Webdunia
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (20:20 IST)
சென்னை அண்ணாநகரில் விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலத்தில் மாநகராட்சியின் அனுமதியின்றி, அண்ணாநகர் டவர் கிளப் கட்டிடம் ஒன்று கட்டியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. 
 
இதனையடுத்து இதுகுறித்து நீதிமன்றத்தில் மாநகராட்சியின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலத்தில் மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டிய கட்டிடத்தை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
முன்னதாக சென்னை அண்ணா நகர் டவர் விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தை காலி செய்யும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் இந்த நோட்டீசை எதிர்த்து கிளப் நிர்வாகம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
 
இதனையடுத்து அண்ணா நகர் விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலத்தில் மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்ட அண்ணாநகர் டவர் கிளப் கட்டிடம் விரைவில் அகற்றப்படும் என தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments