Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணொலியில் கசமுசா.. கடுப்பான நீதிபதிகள்! – வாதாட வந்த வழக்கறிஞருக்கு சிறை!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (11:47 IST)
சென்னை உயர்நீதிமன்ற காணொலி விசாரணையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்ட வழக்கறிஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த சில காலமாக சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள் காணொலி வாயிலாக நடந்து வருகின்றன. தற்போது நேரடியாக வழக்கு விசாரணைகள் நடைபெற்றாலும் சில வழக்குகள் காணொலி வாயிலாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் உயர்நீதிமன்றத்தின் வழக்கு ஒன்று காணொலி வாயிலாக நடந்துள்ளது. அதில் வாதாட வந்த வக்கீல் ஒருவர் காணொலியில் நீதிபதிகள் இருக்கும்போதே பெண் ஒருவருடன் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கடுப்பான நீதிபதிகள் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞருக்கு இரண்டு வார சிறை தண்டனை விதித்துள்ளதுடன், வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்
Show comments