Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் விளையாட்டில் தோல்வி: கல்லூரி மாணவர் தற்கொலை!

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (14:38 IST)
சென்னையில் ஆன்லைன் விளையாட்டில் மோகம் கொண்ட மாணவர் அதில் பணத்தை இழந்ததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அமைந்தக்கரை பகுதியை சேர்ந்தவர் நித்திஸ். கல்லூரி மாணவரான இவர் சமீப காலமாக அங்குள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். ஆன்லைன் சூது விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட நித்திஸ் தொடர்ந்து அதில் பணம் செலுத்தி விளையாடி வந்திருக்கிறார். அதில் பல முறை தோல்வியடைந்து பணத்தை இழந்துள்ளார்.

தனது முழு பணத்தையும் இழந்த நிலையில் தான் பணிபுரிந்த கடையில் இருந்த பணத்தையும் திருடி விளையாடி தோற்றதாக கூறப்படுகிறது. இதனால் மன விரக்தியடைந்த நித்திஸ் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments