Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2023 (07:06 IST)
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத அளவுக்கு நேற்று நள்ளிரவு முதல் சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில் அதிகபட்சமாக 34 செமீக்கும் மேல் மழை பெய்ததால் தண்ணீர் வடியாமல் வெள்ளக்காடாக சென்னை காட்சியளித்து வருகிறது.

மிக்ஜாம் புயல் சென்னையை விட்டு 190 கிலோ மீட்டர் தொலைவில் இப்போது மையம் கொண்டுள்ள நிலையில் நள்ளிரவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மழை பெய்வது குறைந்துள்ளது.

இந்நிலையில் சென்னை செம்பரம்பாக்கத்தில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. 8000 கன அடியில் இருந்து 3822 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள நீரின் அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments