Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம்: டாக்காவுக்கு முதல் விமானம்!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (12:33 IST)
சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் அது மக்கள் பயன்பாட்டுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ரூபாய் 1260 கோடியில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் சென்னை விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த புதிய முனையம் கட்டப்பட்டது என்பதும் பிரதமர் மோடி சமீபத்தில் இதை திறந்து வைத்தார் என்பதும் தெரிந்ததே. 
 
சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த முனையத்தில் சுமார் 3 கோடி பயணிகளை கையாள முடியும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த புதிய விமான நிலையத்தின் முனையம் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த முனையத்திலிருந்து முதல் விமானம் டாக்காவுக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி முதல் விமானத்தில் செல்லும் பயணிக்கு விமான நிலைய அதிகாரிகள் மலர்கள் கொடுத்து வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments