Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் திடீரென தீப்பிடித்த ஏசி பஸ்.. அதிர்ச்சியில் பயணிகள்..!

Mahendran
செவ்வாய், 2 ஜூலை 2024 (17:33 IST)
சென்னையில் ஏசி பேருந்து நடு சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பிராட்வே முதல் கேளம்பாக்கம் சிறுசேரி வரை செல்லும் 109 சி என்ற அரசு ஏசி பேருந்து அடையாறு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தீப்பிடித்தது. முதலில் இந்த பேருந்தில் இருந்து புகை வந்ததை அடுத்து உடனடியாக டிரைவர் பேருந்து நிறுத்தினார். அதை அடுத்து பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அவசர அவசரமாக இறங்க தொடங்கினர்.

பயணிகள் அனைவரும் இறங்கிய சற்று சற்று நேரத்தில் பேருந்து திடீரென எரிய தொடங்கியது. இதை அடுத்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பேருந்து எரிவதற்கு முன்பே புகை ஏற்பட்டதால் பயணிகள் சுதாரித்து வெளியேறினார்கள் என்பதால் உயிர் சேதம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.

 இந்த நிலையில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments