Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரசேகரராவுக்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்: காங்கிரஸ் குஷி!

Webdunia
திங்கள், 13 மே 2019 (20:45 IST)
இன்று நடைபெற்ற சந்திரசேகரராவ், ஸ்டாலின் சந்திப்பு தமிழக அரசியலை மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுல்காந்திதான் பிரதமர் என முதல்முதலில் முழங்கிய மு.க.,ஸ்டாலினே மூன்றாவது அணி அமைக்கும் சந்திரசேகராவுடன் பேச்சுவார்த்தையா என காங்கிரஸ் கூட்டணி அதிர்ச்சி அடைந்தது
 
ஆனால் ஸ்டாலின், சந்திரசேகரராவ் சந்திப்பில் உண்மையில் நடந்தோ வேறு. பாஜக, காங்கிரஸ் என இரண்டு தேசிய கட்சிகளும், ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டால் ,மூன்றாவது அணி ஆட்சி அமைப்பது குறித்து மு.க.ஸ்டாலினிடம் தனது விரிவான திட்டத்தை சந்திரசேகரராவ் விவரிக்க, அதனை பொறுமையுடன் கேட்ட மு.க.ஸ்டாலின், இந்த திட்டம் இப்போதைக்கு இருக்கட்டும், நான் தான் முதலில் ராகுல்காந்தியை பிரதமர் என அறிவித்தேன். அதனால் இப்போதைக்கு அதில் இருந்து பின்வாங்க முடியாது. முடிந்தால் நீங்களும் காங்கிரஸ் கூட்டணியை ஆதரியுங்கள்' என்று கூறினாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரசேகரராவ், செய்தியாளர்களை கூட சந்திக்காமல் அதிருப்தியுடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
 
மு.க.ஸ்டாலின் - சந்திரசேகரராவ் சந்திப்பு குறித்து முதலில் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ், பின்னர் இந்த தகவலை கேள்விப்பட்டு குஷியாகிவிட்டதாம். ஆனால் சந்திரபாபு நாயுடு இருக்கும் கூட்டணியில் சந்திரசேகரராவ் இருக்க மாட்டார் என்பதால் அவர் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments