Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Webdunia
வியாழன், 4 மே 2023 (15:16 IST)
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 

இதுகுறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதியில் நிலவுகிறதது. தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதையடுத்து, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் மே மாதம் ஆம் தேதி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அப்பகுதிகளில்  7 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவாகக்கூடும் . இது 8 ஆம் தேதி வாக்கில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுடவடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், இன்று தமிழகத்தில் புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, இராம நாதபுரம், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், மதுரை ஆகிய பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள்து.

நாளை தமிழகத்தின் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

8 ஆம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் ,  ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி முதல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை படிப்படியாக 24 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

மீண்டும் ஒரு ரயில் விபத்து: இன்ஜின் மற்றும் 8 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு..!

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழை.. மீண்டும் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

இரண்டாவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்- துணை ஆணையாளரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments